Sunday, November 11, 2012

ஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....






வாசலில் குவிந்து கிடந்த செருப்புக்களை பார்த்தவுடன் 'திரும்பி விடலாமா?' ன்று சமீப காலமாக வரும் எண்ணம் இப்பொழுதும் தவறாமல் வந்து போயிற்று. பல விதமான ஆண், பெண் செருப்புகளுக்கு நடுவே என்னுடையதைத் தனியாக அவிழ்த்தேன். மணமான புதிதில் கோவிலுக்கோ அல்லது நண்பர்கள் வீட்டில் விருந்திற்கோ செல்லும் பொழுதெல்லாம் அருணின் செருப்புகளின் பக்கத்தில் என்னுடையதை விடுவதற்குக் கூட மனமில்லாமல் அவற்றின் மேலேயே விடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தேன். முதலில் இதை கவனித்த போதெல்லாம் கேலி செய்தவாறிருந்த அருணுக்கு நாளடைவில் என் பழக்கம் எரிச்சலூட்டுவதாக மாறியது. அது ஒன்று மட்டும் தானா அவனுக்கு எரிச்சலை ஏற்படுத்திய விஷயம்?


மேலும் தொடரவிருந்த நினைவோட்டத்தை நல்லவேளை பின்னால் என்னைப் பார்த்தபடி வந்த தோழி சட்டென்று நிறுத்தினாள். முகத்தில் புன்னகையுடன், "என்ன, இப்ப தான் வரியா சுபா? எனக்கும் நேரமாயிடுத்து," என்று கேட்டபடி அவசர அவசமாக உள்ளே சென்றவளின் பின்னாலேயே ஒட்டிக் கொண்டு நானும் நுழைந்தேன்.
வழக்கம் போலவே பெரிய கும்பல் தான். மிர்சந்தானி வீட்டு தீபாவளி பார்ட்டி என்றால் சும்மாவா? கிட்ட தட்ட சிங்கப்பூரில் உள்ள அனைத்து பெரிய மனிதர்களும், குடும்ப நண்பர்களும் குழுமும் இடமாயிற்றே? ஒரு பக்கம் சுடச்சுட ஜிலேபி பொரி துக் கொண்டிருந்தார்கள். இன்னொரு புறம் கடகட வென்று சப்பாத்திகள் தட்டில் பறந்த வண்ணம் இருந்தன.
பெரிய கும்பலில் ஒரு செளகரியம். யாருடனும் அதிகம் பேசத் தேவையில்லை. அடுத்தடுத்து ஒவ்வொருவரையும் நெருங்கி, "நலமா? வே ல பளு அதிகமா?" என்று சம்பிரதாயக் கேள்விகள் கேட்டபடி நகர்ந்தாலே ஒரு மணி நேரம் μடிவிடும். மீதி நேரமோ சாப்பிடுவதில் சென்று விடும். கடைசி வரை அதிக கவனத்தை ஈர்க்கமலே கூட நழுவிவிடலாம்.



போன வருட பார்ட்டிக்கும் இந்த வருட பார்ட்டிக்கும் எத்தனை பெரிய வித்தியாசம்? போன வருடம் கூட்டத்தில் என் 'ஆண்டிக்' நகை செட்டை தோழிகள் கவனிக்காமல் போய் விட்டால் என்ன செய்வது என்பது தான் அக்கணத்தின் மிகப் பெரிய கவலை. ஒரிருவர் அதைப் பற்றி பேசும் பொழுது அது மற்றவர்கள் காதில் விழுகிறதா என்ற கொசுறுக் கவலை வேறு! வாழ்க் க தான் படி மாறிவிட்டது? ன் ன வரவேற்க வந்த மிஸஸ். மிர்சந்தானி, "எல்லாம் நல்லபடியாக முடிஞ்சதா?" என்றார்.


கேட்ட பிறகு, 'நல்லபடியாக' என்ற வார்த்தையை தவிர்த்திருக்கலாமோ என்ற தர்மசங்கடம் அவர் முகத்தில் படர்வது தெரிந்தது. அவரை மேலும் சங்கடப்பட விடாமல், "எல்லாம் நல்லபடியாக முடிஞ்சது. இப்பொழுது நான் சுதந்திரப் பறவை!" என்று பேச்சை இலகுவாக்க முயன்றேன். 'விவாகரத்து தானே ஆயிற்று. நான் என்ன செத்தா போய்விட்டேன்?, என்று நினைத்தபடி பார்ட்டியை ரசிக்கலாம் என்று முடிவு செய்தேன்!
"எப்படி இருக்கே சுபா?' என்று கனிவாகக் கேட்டபடி அருகில் வந்தார் டாக்டர் மோட்வானி. இங்குள்ள பல இந்தியர்களின் குடும்ப டாக்டர். அதனால், குடும்ப விஷயங்களும் தெரிந்தவர். "உன் ன விட்டுட்டு போகிறத்துக்கு அந்த முட்டாளுக்கு எப்படி மனசு வந்ததோ? நிச்சயமா திரும்பி வருவான் பார்!" என்றார் கோபமாக. கணவன் எப்ப திரும்ப வந்தாலும் திறந்த கைகளோடும், மனத்தோடும் மனைவி காத்துக் கொண்டிருப்பாள் என்று நினைக்கும் தலைமுறையைச் சேர்ந்தவர். நான் நிச்சயமாக அதற்குக் காத்திருக்கவில்லை என்று மனதிற்குள் நினைத்தபடி மெதுவாகச் சிரித்து வைத்தேன்.
விவாகரத்து அளவுக்கு எப்படி போயிற்று என்று பல முறை யோசித்ததுண்டு. ஒவ்வொரு முறையும் பல்வேறு பதில்கள் வந்தன. "நீ மக்கு" என்பது முதல் பதில். ஆனால் நான் நானாகத் தான் இருந்தேன். சென்னையில் வளர்ந்து படித்த பெண். நல்ல குடும்ப நிர்வாகி. அனைவரிடமும் அன்போடு பழகும் குணம். ஒன்று தான் கற்கவில்லை. சுயலாபங்களைக் கணக்கில் கொண்டு நட்பு வட்டத்தைப் பெருக்கியபடி காய்களை நகர்த்தும் அருணுக்குத் தெரிந்த வித்தை! தனக்கு யாரிடமிருந்து என்ன பலன் கிடைக்கும் என்பது தான் அவனுக்கு முதலில் மனதில் படும் விஷயம். அவன் இருந்த மீடியா தொழிலுக்கு தொடர்புகள் தான் மிகவும் முக்கியம் என்பான். தனக்கு பயன் உண்டு என்று தெரிந்தவர்களை மட்டுமே தன் வசீகரமான பேச்சாலும், சிரிப்பாலும் கவர முயல்வான். என்னையும் "அவளிடம் போய் பேசு,
இவர்களை வீட்டுக்கு சாப்பிட கூப்பிடு!' என்று நச்சரிப்பான். அவனில் இருந்த இந்த குணம் வே ல விஷய தில் அவனுக்கு பல உயர்வுக ள பெற்றுத் தந்தனேன்னவோ உண்மை தான்.


முதலில் μரளவு இதற் கெல்லாம் ஒத்துழைக்க நான் முயன்றாலும் தொடர்ந்து ன்னால் வேஷம் போட முடியவில் ல. வேறு ந்த விதத்திலும் என்னைக் கவராதவர்களிடம் வலுவில் போய் ஒட்டிக் கொள்ள எனக்கு தெரியவில்லை; பிடிக்கவுமில்லை. பொதுவாக அருண் காக்கா பிடிக்க நினைப்பவர்கள் நான் ன்ன வரம் அணிந்திருக்கிறேன்? ன் வாட்ச் ன்ன ‘ ராண்ட்’? ன்று நோட்டம் விடுபவர்களாகவே இருந்தார்கள். என் பாட்டி வீட்டுக்கு வந்த தட்டானிடம் பேரம் பேசி வாங்கின வைரத்தோடும் என் டைட்டன் வாட்சும் அவர்களைக் கவராதிருந்ததில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை தான்!
போகும் பார்ட்டிகளுக்கும், டின்னர்களுக்கும் கண்கவரும் முறையில் உடை உடுத்த தெரியாதது இன்னொரு பிரச்சனையாக முளைவிட ஆரம்பித்தது. ஷ்ரேயாவும், அவினாஷ¤ம் பிறந்த பிறகு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று தான் எனக்கு தோன்றியதே தவிர வயதைக் குறைத்து காட்ட என்னென்ன செய்யணும் என்றெல்லாம் தெரியவில்லை. தெரிந்து கொள்ள நான் முனையவுமில்லை. அருணுடன் வெளியே போகும் பொழுது அங்கு வரும் பெண்க ள பார் தால், "நா ளக்கு நம்ம ஷ்ரேயாவும் இ படி தானே வளர்ந்து நி பா. இந்த மாதிரியெல்லாம் டிரஸ் பண்ணி பாளோ இல்லே நம்ப மாதிரி கொஞ்சம் பத்தாம் பசலியா இருப்பாளோ?', என்று என்றெல்லாம் பலவாறாக யோசித்ததுண்டு. அதே நேரம், அருணின் எண்ணங்கள் வேறு மாதிரியானவை என்றே நான் உணர்ந்திருக்கவில்லை.
நான் அதிகம் பழகியராத ஒரு பெண்மணி அருகே வந்தமர்ந்தாள். பரஸ்பரம் அறிமுகம் முடிந்த பின், "யார் உன் கணவர்?' என்றாள். "வரவில்லை", என்றவுடன், "என்னவர் மாதிரியே ஊரிலே இல்லையா? அப்பா! இந்த சிங்கப்பூரிலே இருக்கிற பல கணவர்மார்கள் ஊர் ஊரா சுத்த வேண்டியிருக்கு, இல்லை?" என்றார். "என் கணவர் என் வாழ்க்கையிலெயே இல்லை", என்று சொல்ல நினைத்த பொழுது எனக்கே சிரிப்பு வந்து விட்டது. "இது என்ன, சினிமா வசனம் மாதிரி", என்று நினைத்தபடி "ஆமாமாம்" என்று பேச்சை முடித்து கொண்டேன். அவள் உடை அலங்காரங்களைப் பார்த்தால் கணவர் ஊரிலிருந்தால் நிச்சயம் தன்னுடன் வெளியே அழைத்து செல்லும்படியாகத் தான் இருந்தாள்.



ஒரு கட்டத்தில், அருண் என்னை வெளியிடங்களுக்கு கூட்டிக் கொண்ட போவதை நிறுத்திய போது கூட, 'நல்ல வேளை, இன்னிக்கு தொல்லை விட்டது', என்று தான் நினைத்துக் கொண்டேன். "ஏய் சுபா! மீனல் நட தின பெய்ண்டிங் க்ஸிபிஷனுக்கு அருண் ஒரு சீன பெண்ணோட வந்திருந்தானே", என்று கேள்வி பட்ட பொழுது கூட, "கூட வேலை செய்யறவளா இருக்கும்", என்று அலட்சியமாக இருந்த எனக்கு அருணோடு விவாகரத்து பேச்சு எழுந்த போது அதிர்ச்சியாகத் தான் இருந்தது.
தொழில் வளர்ச்சிக்கு நான் தடையாக இருப்பதாவும், நான் ஒரு 'மத்தியவர்க்கப் பிரதிநிதி' என்றும் ஏதேதோ காரணங்கள். ஒருவருக்கொருவர் அடிப்படையில் பிடிக்காமல் போயிற்று. காரணங்களை துல்லியமாக ஆராய்வதில் என்ன பயன்? "சரி, எங்கேல்லாம் கையெழுத்து போடணும்", என்று தான் கேட்டேன். "இந்தியா திரும்ப வந்துடு", என்று அம்மாவும், அப்பாவும் சொன்னதை உடனே என்னால் ஏற்க முடியவில்லை. இரண்டு குழந்தைகளும் இங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள். திடீரென்று, அப்பாவும் விட்டுட்டு போன நிலையில், நாடும் பள்ளிக் கூடமும் மாற வேண்டும் என்றெல்லாம் அடுத்தடுத்து குழந்தைகளிடம் சொல்ல மனம் வரவில்லை. 'கொஞ்சம் நாள் பார்ப்பமே' என்று நினைத்திருந்தேன்.
"குழந்தைகளைக் கூட்டிக்கிட்டு வரலையா?' என்றாள் ரேகா. கூட அழைத்து கொண்டு வரலாமா என்று ரொம்பவும் யோசித்தேன். சில மாதங்களுக்கு முன் நடந்த ஒரு விஷயம் ஞாபகம் வந்தது. சுனிதா இரண்டாவது மு றயாக மணம் செய்து கொண்டவள். முதல் திருமணத்தில் பிறந்த குழந்தை தாரா. ஒரு பார்ட்டியில் மற்ற குழந்தைகள், "உனக்கு ரெண்டு அப்பாவாமே!', என்று அவளை மிகவும் கேலி செய்து விட்டார்கள். சுனிதாவின் இரண்டாவது கணவர் அமர், பொறுமையாக அந்த குழந்தைகளிடம், "ஆமாம், தாராவோட டாடி நான், பாபா வேறு நாட்டில் இருக்கிறார்”, என்று அதையே ஒரு விளையாட்டு போல் சமாளித்தான். ஆனால், சுனிதா பல நாட்கள் அதை எண்ணி வருந்தியபடியிருந்தாள். பெரியவர்கள் முதுகுக்கு பின்னே காதில் விழாதபடி பேசுவார்கள். குழந்தைகள் முகத்திற்கு நேராகவே கேட்டு விடுவார்கள். "உன்னோட அப்பா சீன கேர்ள் ·பிரண்டோட இருக்காராமே?', ன்று பதிமூன்று வயது ஷ்ரேயாவிடம் யாராவது கேட்டு விட்டால் குழந் த தாங்க மாட்டாள். "இருவரையும் கொஞ்ச நாள் கழிச்சு அழைச்சுண்டு வரேன்" என்றேன்.



தனியே வளைத்த சீமா, "சொல்றேனேன்னு தப்பா நினைச்சுகாதே. அருணை கைக்குள்ளே போட்டுக்க தெரியலை உனக்கு. உனக்கேன்ன நாற்பது வயசு கூட முடியலை. நான் சொல்றதை எல்லாம் கேட்டா ஈசியா ஒரு சக்ஸெஸ்·புல் ஆ ள இரண்டாவதா கல்யாணம் பண்ணிக்கலாம்.." ன்று சொல்ல ஆரம்பித்த ஆலோசனைகளை கேட்டால் ஏதோ உலக அழகி போட்டிக்கு தயார் செய்ய வேண்டிய விஷயங்களின் பட்டியல் போல் இருந்தது. "இதுலேல்லாம் எனக்கு ஆர்வமில்லை சீமா" என்று சொன்னபடி விலகினேன்.


கொஞ்ச நேரத்திலேயே, அடுத்த பார்ட்டி எங்கே என்ற பேச்சுக் கிளம்பியது. நண்பர்கள் குழுவில் குனாலுக்கு அடுத்த மாதம் நாற்பது வயதாகப் போவதால் அவன் மனைவி நூபுர் அதை பெரிசாக கொண்டாட திட்டமிட்டிருக்கிறாளாம். μர் இனிய அதிர்ச்சி கொடுக்கும் விதமாக எல்லோரும் மாறுவேடமிட்டு வரலாம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தார்கள். கைகழுவச் சென்ற நூபுரிடம், "நூபுர், நான் ன்ன வேஷம் போட்டுண்டு வரணும்னு சொல்லவேயில் லயே!' ன்றேன். "உன் இஷ்டம் சுபா.. ஆனா ஒரு விஷயம்..", ன்று இழு தாள்.
"பரவாயில்ல சொல்லு..", என்றேன்.


"குனால் அருணையும் கூப்பிடுட்டான். நான் கூட சொல்லி பார்த்தேன். ஆனா, குனால் பிஸினஸ்லே அரு ண அடிக்கடி சந்திக்க வேண்டியிருக்கு. கூப்பிடாம இருந்தா நல்லா இருக்காதுன்னு சொல்லிட்டான். நீ ஒண்ணும் தப்பா நினைக்கலையே..", என்றாள் சொற்களை மென்றும் முழுங்கியபடியும்.
ம், சோஷியல் நெட்வொர்கிங்! இந்த வி த தானே னக்கு தெரியாது. மற்றவர்களுக்குத் தெரியாமல் இருக்குமா?
"அதனாலேன்ன நூபுர்? நாற்பத்தி ஒண்ணாவது பர்த்டேக்கு என்னை மட்டும் கூ பிடு" ன்ற அசட்டு ஜோக் க அடி து விட்டு விலகினேன். வேறு சிலர் இந்த வருட தீபாவளி விருந்துகளுக்கு என்னைக் கூப்பிடாத காரணம் இப்போழுது சட்டென்று புரிந்தது.


மிஸ்டர் அண்ட் மிஸஸ் மிர்சந்தானியிடமாவது சொல்லிக் கொண்டு கிளம்பலாம் என்று அவர்களை தேடினேன். "என்ன உதவி வேண்டுமானாலும் தயங்காமல் கேளு சுபா", என்று அன்போடு தோளில் கை வைத்தார். எப்பொழுதும் தொட்டு பேசுபவர் தான். இந்த முறை ஏனோ ஒரு இனம்
புரியாத பயம் ஒட்டிக் கொண்டது. அவசரமாக விடை பெற்றுக் கொண்டு வெளியே வந்தேன். தனியாகக் கிடந்த செருப்புகளில் இருந்த செளகரியம் புரிந்தது. டக்கென்று போட்டுக் கொண்டு வெளியேறினேன்.
கைப்பேசி ஒலித்தது. தீபாவளி வாழ்த்துகள் சொன்ன அம்மா, "ரெண்டு நாள் முன்னாடி நம்ம சீதாவோட பையன் கல்யாணத்துக்கு போனேன்டி குழந்தே. எல்லாரும் அரசல் புரசலா உன்னை பத்தியே கேட்டுண்டு இருந்தா. னக்கு ரொம்ப மனசு கஷ்டமா போயிடு து. நல்ல வே ள.. நீ கொஞ்ச நாளைக்கு அங்கேயே இருக்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டே. எனக்கும் அ பாவுக்கும் முதல்ல வரு தமா இருந்தாலும் இங்கே இருக்கிற மனுஷா ள பார்த்தா நல்ல முடிவு தான் எடுத்திருக்கேன்னு நினைச்சுண்டேன்" என்றாள்.
"ம்... இங்கே இருக்கிறவாளும் மனுஷா தானேம்மா" ன்றேன்.
குரல் கம்மியதால் அம்மாவுக்கு சரியாக கேட்கவில்லை போலும். "என்னடி கொழந்தே?" என்றாள்!


Tuesday, October 24, 2006

GOONJ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு உதவ ஒரு வாய்ப்பு!!

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!! நலம் தானே? கொஞ்ச நாளாயிடுச்சு இந்தப் பக்கம் வந்து. ஆனால் அப்பப்ப வந்து பழைய/புதிய வலைப்பூக்களை படிச்சுகிட்டு தான் இருக்கேன்.

உங்கள்லே பலருக்கு GOONJ ஞாபகம் இருக்கும்னு நினைக்கறேன். ஒரு துண்டு துணி என்ற பதிவிலே அந்த அமைப்பை பற்றி எழுதியிருந்தேன். அன்ஷு அவரோட தொண்டை தொடர்ந்து சிறப்பா செய்துகிட்டிருக்காரு. நானும், நண்பர்களும் சேர்ந்து சிங்கையில் நடத்தும் ஒரு அமைப்பு மூலமாஅவருக்கு நிதி உதவி செய்துகிட்டிருக்கோம். அந்த நிதி உதவிகளை எப்படி உபயோகப்படுத்தினோம் என்ற ரிப்போர்ட்களையும் தவறாம அனுப்பிகிட்டிருக்காரு அன்ஷூ. சிங்கைஇஅமைப்பை சேர்ந்த இரண்டு நண்பர்கள் சமீபத்துலே அவரோட தொண்டு நிறுவனத்திற்கு நேரேயும் போய் பார்த்துட்டு வந்திருக்காங்க.

"சரி, எதுக்கு இவ்வளவு பெரிய பீடிகை?? படத்தை போடுங்க!" அப்படின்னு சொல்லறீங்களா?

இதோ படம்:

_________________________________________________________________________________
Dear Friends,

Global Giving (GG), a well known international website is featuring our School to School project on its site www.globalgiving.com ( project code #1331 )

GG has announced a prize of $ 50,000 to the projects that attract the highest online funding till October 31st.

At a time when we are struggling for resources to spread our work to the remotest parts of the country, this comes as a great opportunity. Your support can help us become the highest fund-raiser. The additional prize money will make a huge difference in the success and reach of our work.

Do spread the word. Every single penny matters. Even if each of us just talks to our friends, relatives & colleagues I am sure we can make it…

Looking forward to your enthusiastic support.

With best.

anshu

Anshu K. Gupta ( Ashoka Fellow )
Founder -Director
GOONJ..
Tel.- (m)-98681-46978, (o)-011-26972351
Add-J-93, Sarita vihar, New Delhi-76
E-mail- anshu_goonj1@yahoo.co.in,anshugoonj24@gmail.com
Website- www.goonj.info

_________________________________________________________________________________

உதவ நினைக்கிறவங்க அந்த வலைத்தளத்துக்கு உடனே போய் உங்களோட நன்கொடையை அனுப்பினீங்கன்னா அவரோட இந்த school to school முயற்சிக்கு பெரிய உதவியா இருக்கும். அக்டோபர் 31 deadline...மறந்துடாதீங்க!!

மிக்க நன்றி!

Friday, May 12, 2006

மொழி - சிறுகதை

டைட்டில்லே 'மீண்டும் ஜே.கே.பி'ன்னு போடணும்ன்னு ஆசை தான். ஆனா அடங்கு, அடங்குன்னு ஒரு குரல் கேட்டுக்கிட்டே இருக்கே..என்ன செய்யறது?

எல்லோரும் நல்லா இருக்கீங்க தானே? கொஞ்சம் நீண்ட இடைவெளியா போயிடுச்சு. இனிமே ஏதோ எழுதுவேன்னு தான் நினைக்கறேன்.

ப்ளாகேஸ்வரி (நல்ல பேருங்க), நீங்க கல்கிலே படிச்ச கதை இதோ:

____________________________________________________________________________________

அது ஒரு க்ளினிக் என்று நம்புவது முதலில் சிறிது கஷ்டமாகத்தான் இருக்கும். குழந்தைகளுக்கான பிரத்யேக க்ளினிக். சுவரேல்லாம் சித்திரங்கள். பல 'பளிச்' நிறங்களில் பெற்றோர்கள் அமர நாற்காலிகள். குழந்தைகள் விளையாட சாமான்கள், படம் வரைய வசதியாக குட்டி மேஜை, முக்காலிகள், ஒரு அழகான சிறிய ப்ளாஸ்டிக் வீடு! சிங்கப்பூரில் க்ளினிக் கூட இவ்வளவு ஆடம்பரமாக இருந்தது எனக்கு முதலில் ஆச்சர்யமாக இருந்தத்து.

பணம் கொஞ்சம் அதிகம் வாங்கினாலும் டாக்டர் மிகவும் கைராசிக்காரர். அதனால் எப்பொழுது வந்தாலும் திருவிழாக் கூட்டம். சிங்கப்பூரில் வாழும் எல்லா வெளிநாட்டவர்களின் குழந்தைகளுக்கும் இவர் தான் டாக்டர் என்று என்னை சத்தியம் பண்ணச் சொன்னால் முக்கால்வாசி பண்ணுவேன் என்று தான் நினைக்கிறேன். 'சள சள' வென்று பல மொழிகளில் தாய்மார்கள் குழந்தைகளைக் கொஞ்சும், சமாதானம் செய்யும், அதட்டும், பாலூட்டும் கலவையான சத்தம்.

வருண் என் மடியில் தூங்கிக் கொண்டிருந்தான். அதனால் நான் இந்த தாய்மார்கள் சிம்ஃபோனியில் கலந்து கொள்ளாமல் பார்வையாளராக அமர்ந்திருந்தேன். முன்பதிவு செய்யாமல் வந்ததால் குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகும் என்றாள் டாக்டரின் உதவியாளர். ஜுரம் என்ன முன்பதிவு செய்து கொண்டா வருகிறது? எப்பொழுதும் எடுத்துக் கொண்டு வரும் புத்தகத்தை மறந்ததால் வருவோர் போவோரை பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறு வழியில்லை. ராத்திரி முழுக்கத் தூங்காமல், என்னையும் தூங்கவிடாமல்
இப்பொழுது நன்றாகத் தூங்கும் வருணைப் பார்த்து சற்று பொறாமையாகக் கூட இருந்தது.

எனக்கு எதிரில் இருந்த இருக்கையில் ஒரு ஜெர்மனியத் தாய் தன் குழந்தையுடன் காத்துக் கொண்டிருந்தாள். நான் கல்லூரியில் ஜெர்மன் படித்திருந்ததால் அவள் குழந்தையுடன் பேசியது புரிந்தது.

க்ளினிக்கின் உள்ளே நுழைந்தாள் ஒரு இந்தியப் பெண். கூட ஒரு மூன்று வயதிருந்த பெண் குழந்தை. எனக்கேதிரில் மட்டுமே இடம் இருந்ததால் அங்கே வந்தமர்ந்தாள். அவள் உடை, தலையில் தொற்றிக் கொண்டிருந்த கண்ணாடி, கைப்பை, காலணிகள் எல்லாம் இ த்தாலிய, அமெரிக்க டிசைனர்கள் செய்தது என்று சற்று சத்தமாகவே பறைசாற்றின. அவள் விரலில் இருந்த வைர மோதிரங்களை விற்றால் ஒரு குடும்பம் ஒரு மாதம் உட்கார்ந்து சாப்பிடலாம்! அவள் முகத்தில் இருந்த ஒப்பனையை பார்த்த பொழுது அவள் குழந்தையின் உடல் உபாதை முன்பதிவு செய்து கொண்டு வந்திருக்கலாம் என்று தோன்றியது. எங்கே என்னைப் பார்த்தால் என் இந்தியத்தனம் ஒட்டிக் கொண்டு விடுமோ என்று கவனமாக என்னைப் பார்ப்பதைத் தவிர்ந்தாள்.

குழந்தையிடம் பேசும் மொழியை வைத்து இந்தியாவில் எந்தப் பகுதியை சேர்ந்தவள் என்று கண்டுபிடிக்கலாம் என்று நினைத்த என் எண்ணத்தில் மண்! அவள் குழந்தையிடம் சத்தமாக ஜெர்மனில் பேசினாள்! 'உனக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை' என்று எனக்கு புரியவைக்க செய்தது போலிருந்தது.

பக்கத்தில் இருந்த ஜெர்மனியப் பெண்ணின் குழந்தையிடம் அவள் குழந்தை சரளமாக உரையாடியது. புருவத்தை உயர்த்திய குழந்தையின் தாயிடம் அதற்குத் தான் காத்திருந்தது போல் தன் சுயசரிதையை அவிழ்த்துவிட்டாள். தன் கணவன் ஸ்விட்சர்லாந்தில் ஐந்து வருடம் பணியாற்றியது, அந்த நாட்டு கலாச்சாரம் தன்னை மிகவும் கவர்ந்து விட்டதால் தான் தீவிரமாக ஜெர்மன் கற்றுக்கொண்டது, தன் குழந்தை அங்கேயே பிறந்து மூன்று வருடம் வளர்ந்ததால் அதற்கு ஜெர்மன் தவிர வேறு மொழி தெரியாதது, இங்கே கூட ஜெர்மன் சர்வதேச பள்ளியில் தான் குழந்தையை சேர்ப்பதாக உத்தேசம் என்று சொல்லிக் கொண்டே போனாள். 'நான் உன்னைச் சேர்ந்தவள்' என்று அவளுக்கு புரிய வைக்க மிகவும் மெனக்கெடுவது போல் தோன்றியது.

அந்த ஜெர்மனியப் பெண் சுவாரஸ்யமாக கேட்பது போல் பாவனை செய்து கொண்டிருந்தாள். ஒரு வேளை தான் சொன்னதின் முக்கியத்துவம் அவளுக்கு புரியவில்லையோ என்று நினைத்தால் போலும் இந்த இந்தியப் பெண். மேலும் தீவிரமாக தன் மொழிவளத்தை காட்ட தன் மகளை மடியில் அமர்த்தி, குதிரையில் போவது போல் கால்களை மேலும் கீழுமாக ஆட்டி ஜெர்மனில் ஒரு குழந்தைகளுக்கான பாட்டு வேறு பாடிக் காண்பித்தாள்!

'உன் கணவன் கென்யாவில் பணியாற்றி இருந்தால் நீ ஸ்வாஹிலி கற்றுக் கொண்டிருப்பாயா?' 'என்று இந்தியப் பெண்ணிடம் கேட்க வேண்டும் போல் இருந்தது.

இந்த ஜெர்மனிய மங்கை இந்தியாவில் ஐந்து வருடங்கள் வாழ்ந்தால் தன் தாய்மொழியையும் கலாச்சாரத்தையும் மறந்துவிட்டு இந்தியனாக மாறிவிடுவாள் என்று நினைக்கிறாயா?' என்ற கேள்வியும் மனத்தில் தோன்ற, தன் குழந்தையிடம் ஜெர்மனியப் பெண் 'சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு' பாடினால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன். சிரிப்பு வந்தது.

அதற்குள் இந்தியப் பெண்ணின் பிடியிலிருந்து தப்பிய குழந்தை அங்கிருந்த சிறு மேஜை மேல் ஏறியது. பேச்சு மும்மரத்தில் அவள் கவனிப்பதற்குள் மேஜையிலிருந்து குதிக்க முயன்று, அஷ்ட கோணலாக கீழே விழுந்து, வீறிட்டலறியது! 'விறுக்' கென்று உடனே திரும்பினாள் அவள். தன்னை சுதாரித்து கொள்வதற்குள் அவள் வாயிலிருந்து 'டக்'கென்று வெளிப்பட்டது வார்த்தை: "சனியனே!"

Sunday, November 20, 2005

Going to Chennai!!

கிட்டதட்ட 8 வாரங்களுக்கு வலைபதிவுகளிலிருந்து ஒரு சின்ன ப்ரேக்...அடுத்த வாரம் இந்தியப் பயணம். ஒரு திருமணத்திற்கு போறதுனாலே சற்றே நீண்ட பயணம் (6 வாரங்கள்!).

இந்த வார கல்கியில் என்னுடைய சிறுகதை வந்திருக்கிறது. இந்தக் கதை மே மாதம் எழுதியது. எழுதியவுடன் படித்துவிட்டு கருத்துகள் சொன்ன நண்பர் ஸ்ரீகாந்த் மீனாட்சிக்கும் அவர் மனைவிக்கும் மிக்க நன்றி. கதையின் பெயரை மாற்றி இருக்கிறார்கள். வேறேதாவது edit செய்திருக்கிறார்களா என்று தெரியவில்லை.

சென்னையில் இருக்கும் சில வலைப்பூ நண்பர்களுடன் தனிமடலில் தொடர்பு கொண்டுள்ளேன். சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும். வேறேதாவது குழு சந்திப்புகள் நடந்தால் எனக்கு ramyanags@gmail.com என்ற முகவரியில் தெரிவிப்பவர்களுக்கு இராமநாதன் குலுக்கல் முறையில் பரிசளிப்பார் :-)

அடாது மழை பெய்தாலும் விடாது வந்து '-' குத்தும் நண்பர்கள் கொஞ்சம் பொறுத்திருங்கள்..சீக்கிரம் வந்துவிடுவேன் :-)

மீண்டும் 2006ல் சந்திப்போம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். உலகிற்கு மன நிம்மதி தரும் ஆண்டாக மலர வேண்டும் என்று இந்தியாவில் போக திட்டமிட்ட கோயில்களிலேல்லாம் வேண்டிக் கொள்கிறேன் (பேராசை தான்..கேட்டு வைப்போமே!).

பி.கு: சலங்கை ஒலியில் கமல் டெல்லி செல்வதற்கு பொட்டியை தயார் பண்ணிக் கொண்டே எட்டி பார்க்கும் பக்கத்து மாடி பையனிடம் "Going to Delhi" என்று பெருமையாக சொல்லுவார்..டைட்டிலை அதெ தொனியில் படிக்கவும்! :-)

பி.கு2: 'சென்னைக்கு போறதுலே என்ன பெருமை?' என்று கேட்பவர்கள் இங்கே கிளிக்கவும் :-)

Saturday, November 12, 2005

அகத்தின் அழகு - சிறுகதை

இந்த வார நட்சத்திரம் கோ. கணேஷுடைய இந்த பதிவுக்கு வந்த பின்னூட்டங்களை பார்த்ததும் இந்த கதையை வலையேற்றலாம் என்று தோன்றியது.
-------------------------------------------------------------------------------

“நாளைக்கு பெங்களூர் போகணும் ரேகா! வர நாலு நாள் ஆகும்னு நினைக்கறேன்” என்று தன் மனைவியிடம் சொன்னான் கிஷோர்.

“என்ன கிஷோர்? நாளைக்கு ராத்திரி லோகு வரானே? மறந்துபோயிடுத்தா? மூணு நாள் இங்கே தானே தங்கப் போறான்!” என்றாள் ரேகா.

ரேகாவின் அத்தை மகன் லோகு என்ற லோகேஷ். பல குடும்பங்களில் நடப்பது போல் ரேகாவிற்கும் லோகுவிற்கும் திருமணம் செய்யலாம் என்ற எண்ணம் இரு குடும்பங்களிலும் லேசாக இருந்தது. அது அரசல் புரசலாக வெளிப்படவும் செய்தது. ரேகா காலேஜில் படித்துக் கொண்டிருந்த பொழுது லோகேஷ் எம். பி. ஏ படிப்பை முடித்து விட்டு ரேகாவிற்காக சென்னையில் வேலை தேடிக் கொண்டான். ஓரு புகழ் பெற்ற விளம்பர நிறுவனத்தில் நல்ல வேலைக் கிடைத்தது. இயல்பாகவே கலகலப்பாகப் பழகுவான். ஏதாவது ஜோக்கடித்துக் கொண்டே இருப்பான். நேர்த்தியாகவும் சற்று ஆடம்பரமாகவும் உடை உடுத்துவான். ஒரு நாள் வீட்டில் தங்கி விட்டுப் போனால் இரண்டு நாட்கள் அவனுடைய டியோடெரெண்டின் வாசனை அந்த அறையைச் சுற்றும். ரேகாவின் மனம் அவனைச் சுற்றியதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லைதான்! இருவர் வீட்டிலும் சற்றுப் பழமைவாதிகள் இருந்ததாலும் அதிகாரப்பூர்வமாக சம்மதம் கிடைக்காததாலும் சந்திப்புக்களும் பழக்கமும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் தான் இருந்தன.

ரேகாவின் படிப்பு முடிந்ததும் ஜாதகத்தை கையில் எடுத்த பெரியவர்கள் முதலில் லோகுவின் ஜாதகத்தோடு தான் ஒப்பிட்டார்கள். துளிக்கூட சேரவில்லை! தாம்பத்தியம் நீடிப்பது மிகவும் கஷ்டம் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார் ஜோசியர். மனம் உடைந்துப் போனான் லோகு. அழுது ஆர்ப்பாட்டம் செய்தாள் ரேகா. “ஜோசியத்தை நம்பாம திருமணம் செஞ்சுப்போம்னு தீவிரமா இருந்தீங்கன்னா நாங்க குறுக்க நிக்கலை. ஆனால் நாளைக்கு ஒரு கஷ்டம்னா எங்க கிட்டே வந்து கண்ணை கசக்காதே” என்று திட்ட வட்டமாக சொல்லிவிட்டார் ரேகாவின் அப்பா. இருவருக்கும் குடும்ப ஜோசியரிடம் நம்பிக்கை இருந்ததால் இந்த விஷப் பரீட்சையில் இறங்க அவர்களிடம் தைரியம் இல்லை. சில மாதங்களில் யதார்த்தத்தை ஒப்புக் கொண்டுவிட்டனர் இருவரும். ரேகாவிற்கு கிஷோருடன் திருமணம் நடந்த இரண்டு மாதத்திற்குள் லோகுவிற்கு அனிதாவுடன் திருமணம் நடந்தது. உடனே லோகுவிற்கு மும்பைக்கு மாற்றமும் வந்தது.

கிஷோர் எந்தவிதத்திலும் லோகுவிற்கு குறைந்தவனில்லை. ஆனால் சுபாவத்தில் நேர் எதிர்! அமைதியானவன், ஆழமானவன். சுலபத்தில் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக விஷயங்களை அலசக்கூடியவன். தன் காதலைப் பற்றி யாராவது உறவினர் மூலம் கேள்விப்படுவதை விட நாமே சொல்லிவிடுவது தான் நியாயம் என்று நினைத்த ரேகா, கல்யாணத்திற்கு முன்பாகவே கிஷோரிடம் தன் தோற்றுவிட்ட காதல் கதையை சொல்லிவிட்டாள்.

“ஸாரி டு ஹியர் தட் ரேகா. நீ என்னை கல்யாணம் செஞ்சுண்டா எந்த விதமான ஏமாற்றத்தையோ, வருத்தத்தையோ சந்திக்காம இருக்க என்னாலான எல்லா முயற்ச்சிகளையும் பண்றேன்,” என்று பண்போடு பதிலளித்தான். அதற்கு மேல் துருவித் துருவி ஒன்றும் கேட்கவும் இல்லை. லோகுவின் கல்யாணத்திலும் உற்சாகமாக கலந்து கொண்டான்.

இதுவே ரேகாவிற்கு அவன் மேல் ஒரு மரியாதை கலந்த காதல் உருவாக அஸ்திவாரமாக இருந்தது.

இப்பொழுது இரண்டு வருடம் கழித்து லோகு வரப்போகிறான். ஆனால், கிஷோர் ஊருக்கு போக வேண்டிய சூழ்நிலை!

“நான் இல்லேன்னா என்ன ரேகா? உங்க ரெண்டு பேருக்கும் தான் பேச நிறைய விஷயம் இருக்குமே! நான் அடுத்த தடவை மீட் பண்ணா போச்சு!” என்றான் கிஷோர்.

கிஷோரை கொஞ்சம் சீண்டிப் பார்க்க நினைத்தாள் ரேகா, அந்த வலையில் தானே விழப் போவது தெரியாமல். “என்ன கிஷோர்? லோகு யாருன்னு மறந்து போயிடுத்தா? என் முன்னால் காதலனோட நான் மூணு தான் தனியா இருக்கிறதுலே ஆட்சேபம் ஒண்ணும் இல்லியா?” என்றாள் குறும்பாக சிரித்தபடி.

“லோகு யாருன்னு நன்னா ஞாபகம் இருக்கு ரேகா. ஒரு விதத்துலே நான் ஊர்லே இல்லாதது நல்லது தான்னு நினைக்கறேன்” என்று சொல்லி நிறுத்தினான் கிஷோர்.

ரேகாவின் முகம் சிவக்க ரம்பித்தது. “நான் சும்மா தமாஷ் பண்ணா நீ என்ன உளர்றே?” என்று சீறினாள்.

“கோபப்படாதே ரேகா. சொல்ல வந்ததை முழுக்க கேளு. இந்த சந்திப்பு உன் ழ் மனசுலே இருக்கிற சில உணர்ச்சிகளை நீ நேருக்கு நேர் சந்திக்க ஒரு நல்ல வாய்ப்பு” என்றான்.

குழம்பிய முகத்தோடு பார்த்தவள், “புரியலை” என்றாள்.

“நீ என்னை கணவனா பரிபூர்ணமா ஏத்துண்டாலும் லோகு மேலே ஒரு சின்ன கவர்ச்சி பாக்கி இருக்கு இல்லையா?” அவள் கண்களை நேராக பார்த்தபடி கேட்டான் கிஷோர்.

சடாரேன்று தலையை குனிந்து கொண்டாள் ரேகா. எல்லா விஷயங்களையும் ஆழமாக புரிந்து கொள்ளும் தன் கணவனின் இந்தக் குணம் அவளுக்கு பரிச்சியம் தான். ஆனால் தான் கையும் களவுமாக பிடிபடுவோம் என்று அவள் நினைக்கவில்லை. அவனை நேருக்கு நேர் பார்க்க கூச்சமாக இருந்தது. தன் உணர்வுகளை மறுத்து கிஷோரை ஏமாற்ற அவள் விரும்பவில்லை.

“ஆமாம் கிஷோர். நான் அதை மறைக்க விரும்பலை. ஆனால் அதை நினைச்சு வெட்கப்படறேன். உன் முன்னாலே கூனிக் குறுகி ஒப்புக்கறேன். என்னோட உள் மனசுலே இருக்கிறதே எப்படி கண்டுபிடிச்சே கிஷோர்?” பாதி நேரம் தரையை பார்த்தபடி பேசி முடித்தாள் ரேகா.

“ரொம்ப சுலபம். சாதாரணமாவே ஒருத்தரை புரிஞ்சுக்க எனக்கு அதிக நேரம் தேவைப் படாது. அதுவும் தவிர உன் கண்கள் எவ்வளவு எக்ஸ்ப்ரஸிவ்னு நான் பல தடவை வர்ணிச்சுருக்கேன். அதை வைச்சே உன் உணர்ச்சிகளை நான் கண்டுபிடிச்சுடுவேன். லோகுவை பத்தி பேசும் பொழுதேல்லாம் உன் கண்கள்லே ஒரு பிரகாசம். அவன் கல்யாணம் நடந்த பொழுது அவன் மனைவி உன்னை விட பெரிசா அழகுலேயோ படிப்பிலேயோ உசத்தி இல்லைன்னு நீயா முடிவு பண்ணி சந்தோஷப்பட்டுண்டே. உன் அம்மாவோட பேசும் பொழுதும் சரி, மும்பைலே இருக்கிற உங்க ரெண்டு பேரோட இன்னோரு கஸினோட பேசும் பொழுதும் சரி லோகுவை பத்தி விசாரிக்காம இருக்க மாட்டே. என்னை ஏமாத்தறதா நினைச்சு குரலை மட்டும் அசுவாரஸ்யமா மாத்திப்பே. என்னோட வேலையிலே எனக்கு கிடைக்கிற வளர்ச்சியையும், நம்ம வாழ்க்கை முறையிலே ஏற்ப்படற வளர்ச்சியையும் லோகுவோட வாழ் நிலையோட ஒப்பிட இந்த சம்பாஷணைகள் உனக்கு உதவியா இருந்ததுன்னு எனக்கு தெரியும். இத்தனை க்ளூஸ் போறாதா ரேகா உனக்கு இன்னும் கொஞ்சம் கவர்ச்சி பாக்கி இருக்குனு முடிவு பண்ண?” என்ற கிஷோர் தொடர்ந்தான், “இதிலே வெட்கப்படவோ, வருத்தப்படவோ ஒண்ணுமே இல்லை ரேகா. ஒரு நல்ல ஸ்வீட் சாப்பிட்டா அதோட சுவை கொஞ்ச நேரம் நாக்குலே தங்கறதில்லையா? அதே மாதிரி உன்னை உண்மையா நேசிச்ச ஒருவனோட அன்பு உனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு.”

“ஒரு பக்கம் நான் இவ்வளவு ட்ரான்ஸ்பெரண்டாவா இருந்திருக்கேன்னு நினைச்சு அவமானமா இருக்கு. இன்னோரு பக்கம் என் கணவன் என்னை இவ்வளவு தெளிவா புரிஞ்சு வைச்சுருக்கிறதை நினைச்சு பெருமையா இருக்கு. உனக்கு கோவமோ, பொறாமையோ வரலையா?”

“இரண்டுமே ஆக்கப்பூர்வமான உணர்ச்சிகள் இல்லையே! உன் உணர்ச்சிகள் நிஜம். அதை முதல்லே நாம ஒப்புக்கணும். அக்ஸெப்டண்ஸ் தான் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுபிடிக்கிற முயற்ச்சியின் முதல் படி. அடுத்தது பிரச்சனையை தைரியமா எதிர் கொள்ளணும். அதைத் தான் நாம இப்ப பண்ணறோம். நான் கோபபட்டிருந்தா நீ உன் பீலிங்ஸை அமுக்கி மனசோட ஒரு மூலைக்கு தள்ளியிருப்பே. ஆனா அது இருந்துகிட்டு தான் இருக்கும். அது சரியான தீர்வில்லையே? முதல்லே கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்தது. தீவிரமா யோசிச்சு பார்த்தப்போ நீ என் மேல மனப்பூர்வமா அன்பு செலுத்தறதுலே எந்த சந்தேகமும் எனக்கு இல்லை. லோகு மாதிரி நான் வெளித் தோற்றத்துலே கொஞ்சம் ஆடம்பரமா இல்லைங்கறது தான் உன்னோட குறைன்னு எனக்கு புரிஞ்சுது. இதை நீ மறைமுகமா எனக்கு பல தடவை உணர்த்தியிருக்கே. உனக்காக நான் ஓரளவு மாறினாலும் லோகுவை காபி அடிக்கறதுலே எனக்கு உடன்பாடு இல்லை. வெளித் தோற்றத்துலே மயங்கறது மனித இயல்பு ரேகா. எவ்வளவோ பேரு மாதவன் போட்டோவையும், சிம்ரன் போஸ்டரையும் வீட்லே வைச்சுக்கறது இல்லையா? அதுக்காக எல்லா கணவனும் மாதவனாக முடியுமா இல்லை மனைவி தான் ஆல் தோட்டா பூபதி டான்ஸ் ட முடியுமா?” என்று சிரித்தான் கிஷோர்.

ரேகாவால் சிரிக்க முடியவில்லை. கண்கள் லேசாக கலங்க ரம்பித்தன. “என் எதிர்பார்ப்புகளை உன் மேலே திணிக்க முயற்சி செஞ்சு என்னை அறியாம உன்னை காயப்படுத்தியிருக்கேன் இல்லை?” என்றாள்.

“சீ! பைத்தியம். எதுக்கு அழறே? எதிர்பார்க்கறதுலே என்ன தப்பு? என்ன எதிர்ப்பார்க்கிறோம்ங்கறது தான் முக்கியம். இப்போ நாம ஒரு நண்பர் வீட்டுக்கு சாப்பிட போறோம். அவர் மனைவி அருமையா சமைச்சுருக்காங்க. ரேகா இவ்வளவு நன்னா சமைச்சா எப்படி இருக்கும்னு கற்பனை பண்ணி பார்க்கறது தப்பில்லை. ஆனால் இவங்க எனக்கு மனைவியா இருந்திருந்தா எப்படி இருக்கும்னு நான் நினைச்சா, அது நம்ம மண வாழ்க்கையோட தோல்வி! அஸ்திவாரத்தையே ஆட்டிப் பார்க்கிற விஷயம்.”

“எனக்கு புரியறது கிஷோர். நான் இப்ப என்ன செய்யணும்?”
“நாளைக்கு லோகுவைப் பார்க்கும் பொழுது தைரியமா உன் உணர்ச்சிகளை முழுமையா சந்திச்சு, இந்தக் கவர்ச்சி வாழ் நாள் முழுக்க நீடிக்க போறதா இல்லை நீ இதை வெளிப்படுத்தக் கூடிய ஒரு ஆக்கப்பூர்வமான உணர்ச்சியா மாத்திக்க போறியான்னு முடிவு பண்ணிக்க. குட் லக்!” என்று சொல்லிவிட்டு பிஸ் போய்விட்டான் கிஷோர்.

அடுத்த நாள் மாலை வாசல் மணி ஒலித்தது. லோகுவோடு உள்ளே நுழைந்தாள் அனிதா. சம்பிரதாய பேச்சுக்களும் பரஸ்பர விசாரிப்புகளும் முடிந்தன. அனிதா பாத்ரூமில் நுழைந்ததும், “நீ மட்டும் தானே ஆஃபீஸ் விஷயமா வரதா இருந்தே....” என்றாள் ரேகா.

“நேத்திக்கு சாயங்காலம் போன்லே பேசும் பொழுது நீ கிஷோர் ஊருலே இல்லைன்னு சொன்னே இல்லையா? அனிதாவுக்கு நம்ம காதல் விஷயத்தை சொல்லியிருக்கேன். அதான், அடம் பிடிச்சு கடைசி நேரத்துலே என் கூட வந்துட்டா. நான் அவளை உண்மையா நேசிக்கறேன் ரேகா இருந்தாலும் எப்பப் பார்த்தாலும் சந்தேகம்...” என்று சோகமாக இழுத்தான் லோகு. அவன் முகத்தில் இருக்கும் சந்தோஷமும் உற்சாகமும் வடிந்து ஆயாசமும் அயர்ச்சியும் தான் தெரிந்தது.

லோகுவைப் பார்த்தால் பரிதாபமாக இருந்தது. மனதில் ஒரு மூலையில் இருந்த உணர்ச்சிகளுக்கு விடுதலை அளித்து மனத்தை விசாலப் படுத்திய கிஷோர் எங்கே? இல்லாததை இருப்பதாக கற்பனை செய்து கொண்டு மனத்தை குறுகலாக்கி கொண்டிருக்கும் அனிதா எங்கே?

“கவலைப்படாதே லோகு. இன்னும் ஒரு ரெண்டு நாட்கள் கூட தங்கிட்டுப் போ. கிஷோர் வந்ததும் நானும் அவரும் அனிதாவோட பக்குவமா பேசி அவ மனசை மாத்த எல்லா முயற்சியும் செய்யறோம். உன் சந்தோஷம் தான் எங்களுக்கு முக்கியம்,” என்று ஆறுதலாக சொல்லிவிட்டு தெளிந்த மனத்துடன் கிஷோரின் வருகையை வலுடன் எதிர் நோக்கினாள் ரேகா.

(அமரர் கல்கி நினைவுச் சிறுகதை போட்டி 2004ல் இரண்டாவது பரிசு பெற்ற கதை)

Sunday, October 30, 2005

சிறு துளி - மழை நீர் சேமிப்பு பற்றிய சிறுகதை

போன வருடம் ஆனந்த விகடனில் 'தண்ணீரைத் தேடி" என்று ஒரு போட்டி அறிவித்திருந்தார்கள். அந்தப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற கதை (ஆ.வி யில் வெளியிடவில்லை. பரிசுகளை ஸ்பான்ஸர் செய்திருந்த Waternet Federation என்ற அமைப்பு வெளியிடப் போகும் ஒரு தகவல் bookletல் பிரசுரிப்போம் என்று சொன்னார்கள்)
_____________________________________________________________________________________

ஊருக்கு கிளம்ப வேண்டிய நாள் வந்தாச்சு. வழக்கம் போல் ஒரு மாத விடுமுறை போன இடம் தெரியவில்லை. டிசம்பர் கச்சேரி ஸீஸன் என்பதால் நேரம் போதவில்லை. பதினாங்கு வயது ஷ்ரவனும், பன்னிரண்டு வயது ஷ்ருதியும் சிங்கப்பூரில் சில வருடங்களாகப் பாட்டும், வயலினும் கற்றுக் கொள்வதால் கச்சேரிகள் அவர்களுக்கு சுவாரஸ்யமாகத்தான் இருந்தன. ஒன்று, இரண்டு நாட்கள் தான் போரடிக்கிறது என்று படுத்திவிட்டார்கள்.

விமான நிலையதிற்குக் கிளம்பும் முன் பாட்டி, தாத்தாவிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டே, “பாட்டி, இந்த வருஷம் அப்பாக்கு ஆஃபீஸிலே ரொம்ப வேலை. அதனாலே நாங்க சம்மர் வெகேஷனுக்கு எங்கேயும் போகலை. திருப்பி சென்னை தான் வரப் போறோம்,” என்றாள் ஷ்ருதி.

“சென்னை வேண்டாம்டி செல்லம். தண்ணியே கிடையாது. நாங்களே என்ன பண்ணப் போறோம்னு தெரியலை. நினைச்சாலே பயம்மா இருக்கு,” என்றாள் அம்மா. அருகே இருந்த வீட்டு வேலைக்காரி தனம், “ஆமாங்கண்ணு. அங்கேயே நிம்மதியா இரு. எங்க சேரிலே இப்பவே சுத்தமா தண்ணி இல்லே. நேத்து என்னாமோ கண்ட தண்ணிய குடிச்சிட்டு புஷ்பா வவுத்து நோவுன்னு படுத்துகினு கிடக்கு,” என்றாள்.

“ஓ நோ. அதான் புஷ்பா இன்னிக்கு சாயங்காலம் வரலயா தனம் ஆண்டி,” என்றாள் ஷ்ருதி சோகமாக. அவள் முகம் வாடிவிட்டது.

ஏர்போர்ட் வரும் பொழுது ஷ்ருதியின் முகத்தில் சுரத்தே இல்லை. “ஏம்மா இங்கே தண்ணி இல்லை? இவ்வளவு பேர் தண்ணி இல்லாம என்ன பண்ணுவா?” என்று கேட்டுக் கொண்டே வந்தாள். செக்-இன் முடிந்து, கஸ்டம்ஸ் தாண்டி விமானத்தில் ஒரு வழியாக ஏறினோம்.

நாள் முழுக்க வழக்கம் போல் கடைசி நிமிட ஷாப்பிங், உறவினர்களுக்கு போய்ட்டு வரேன் என்று போன் செய்வது, சாமான்களை மூட்டை கட்டுவது என்று சரியாக இருந்தது. “ஷ்ருதி.. நாளைக்கு ஊருக்கு போய் பேசலாம்டா. அம்மாக்கு ரொம்ப டையர்டா இருக்கு,” என்றபடி சீட்டில் சாய்ந்தேன். அப்பா பக்கம் திரும்பினாள். அவர் ஏற்கனவே குறட்டை விட ஆரம்பித்துவிட்டார்!

அடுத்த நாளிலிருந்து சிங்கப்பூர் வாழ்க்கை வேகமாகத் தொடங்கி விட்டது. அலுவலகம், ஸ்கூல், பூட்டியிருந்த வீட்டை சுத்தம் செய்வது, சிராங்கூன் ரோட்டில் மளிகை, கறிகாய் ஷாப்பிங் என்று வேலைச் சரியாக இருந்தது. ஷ்ருதி இந்த தண்ணீர் விஷயத்தை நிச்சயம் மறக்கமாட்டாள் என்று எனக்குத் தெரியும். சின்ன வயதிலிருந்தே ஏதாவது தன்னை பாதித்தால் அதைப் பற்றி முழுவதுமாக கேள்விக் கேட்டுத் துளைத்து விடுவாள். தனக்குத் திருப்தி தரும் பதில் கிடைக்கும் வரை வலைத் தளங்களுக்குச் செல்வது, டீச்சரிடம் விவாதிப்பது, புத்தகங்களில் தேடுவது என்று ஓயமாட்டாள். அவள் அப்பாவும் மகள் ஜனாதிபதி கலாமைப் போல் பெரிய விஞ்ஞானியாக வருவாள் என்று அவளை ஊக்குவிப்பார்.

அன்று எனக்கு வீட்டிற்கு ஷ்ருதியின் டீச்சர் ஏமி போன் செய்தாள். “ஹலோ மிஸஸ். காணெஷ்.. ஷ்ருதியின் விடுமுறையின் பொழுது என்ன நடந்தது? அவள் சிறிது சலனப்பட்டிருக்கிறாள் போலிருக்கே?” என்றாள் ஆங்கிலத்தில்.

மாணவர்களைத் தங்கள் விடுமுறையைப் பற்றி பேச அழைத்திருக்கிறாள் டீச்சர் ஏமி. ஷ்ருதி சென்னையின் தண்ணீர் கஷ்டத்தைப் பற்றி பேசியிருக்கிறாள். அவளின் வருத்தத்தைப் பார்த்த ஏமி உடனே எனக்கு போன் செய்திருக்கிறாள்.

நான் நடந்ததை விவரித்தேன். “ஓ..தண்ணீர் சேமிப்பு பற்றியும் சில நாடுகளில் தண்ணீர் எவ்வளவு அரிதாகப் போய்விட்டது என்றும் குழந்தைகளுக்கு கண்டிப்பாகப் புரியவைக்க வேண்டும். நாங்கள் இன்னும் இந்த டெர்மிற்கு ப்ராஜெக்ட் தேர்வு செய்யவில்லை. இதையே எடுத்துக் கொண்டால் என்ன? உங்கள் உதவியும் தேவைப்படும்.” என்றாள்.

ஷ்ருதியின் பள்ளி சிங்கப்பூரில் உள்ள ஒரு சர்வதேசப் பள்ளி. சமுதாயத் தொண்டு செய்வது மற்றும் சமூக அவலங்களுக்கு தங்களால் முடிந்த வரை தீர்வு காண்பது என்பது அந்தப் பள்ளியின் நோக்கத்தில் ஒன்று. குழந்தைகளை க்ளோபல் சிடிசென்ஸ் என்ற பொறுப்புணர்சியோடு நடந்து கொள்ள ஊக்குவிப்பார்கள். சிறு குழந்தைகள் தங்கள் உபயோகப்படுத்திய ஆனால் நல்ல நிலையில் உள்ள புத்தகங்கள், பள்ளிச் சீருடைகள் மற்றும் பைகள் போன்றவற்றை அருகில் உள்ள கம்போடியா, வியட்நாம், மங்கோலியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள பள்ளிகளுக்கு அனுப்புவார்கள். பெரிய குழந்தைகள் வருடத்திற்கு ஒரு முறையாவது அந்த நாடுகளுக்குச் சில நாட்கள் சென்று பள்ளிகளைச் சீரமைப்பது, தண்ணீர் தொட்டிகள் கட்டுவது, கம்ப்யூட்டர் சொல்லிக் கொடுப்பது போன்ற வேலைகளைச் செய்துவிட்டு வருவார்கள். ஏதாவது பொருட்கள் விற்று அல்லது கலை நிகழ்ச்சி நடத்திப் பணம் சேகரித்து இது போன்ற விஷயங்களுக்கு அனுப்புவார்கள். பல சமயம் பெற்றோரையும் இதில் ஈடுபடுத்துவார்கள். சிறு வயதிலிருந்தே தங்களைச் சுற்றி நடக்கும் பிரச்சனைகளுக்கு தாங்கள் எப்படி உதவலாம் என்ற எண்ணத்தை குழந்தைகளின் மனத்தின் நன்றாகப் பதிய வைக்கும் ஒரு பள்ளி.

இந்த டெர்ம் ப்ராஜெக்டிற்கு சென்னையின் தண்ணீர் கஷ்டத்தை தலைப்பாக எடுக்கலாம் என்று மிஸ். ஏமி சொன்னவுடன் பரபரப்பு என்னையும் தொற்றிக் கொண்டது. கண்டிப்பாகச் செய்யலாம் என்று வாக்குக் கொடுத்து விட்டு ஷ்ருதியின் வரவை எதிர்பார்த்தேன்.

ப்ராஜெக்டை ப்ளான் பண்ண ரம்பித்தோம். “சிங்கப்பூரில் ஏன் தண்ணி கஷ்டம் இல்லை? நாம தாராளமாக தண்ணியை உபயோகபடுத்தறோமே?” என்றாள் ஷ்ருதி. “இங்கேயும் தண்ணி கிடையாது ஷ்ருதி. ஆனால் இது சின்ன நாடு, முக்கியமா பணக்கார நாடு. அதனால சிங்கப்பூர் அரசு பணம் கொடுத்து மலேஷியாவிலிருந்து தண்ணி வாங்கறாங்க. நாம மாசா மாசம் தண்ணி உபயோகிக்கிற அளவைப் பொருத்து அரசுக்கு பணம் கட்டறோம்,” என்றார் என் கணவர்.

“அப்படின்னா இங்கேயும் தண்ணியைச் சிக்கனமா பயன்படுத்தினா பணத்தை மிச்சப்படுத்தலாம் இல்லையா?” என்றான் ஷ்ரவன்.

“கண்டிப்பா மிச்சப்படுத்தலாம் ஷ்ரவன். தண்ணிங்கிறது உலகத்துக்குப் பொதுவான ஒரு இயற்கை வளம். இப்ப இங்கே தாராளமா கிடைச்சாலும் அதைப் பொறுப்போட செலவழிக்கிறது ரொம்ப முக்கியம்,” என்றேன்.

இந்த உரையாடல் எனக்கு ஒரு நல்ல யோசனை தோன்ற உதவியது. மிஸ். ஏமியுடன் உடனே பகிர்ந்து கொண்டேன். ப்ராஜெக்ட் ப்ளான் தயாரானது. ஷ்ருதியின் வகுப்பின் நான்கு பிரிவுகளையும் சேர்த்தால் மொத்தம் நூறு மாணவர்கள். அவர்களுக்கு தண்ணீர் சேமிப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்கள் சேமிக்கும் தண்ணீரால் அவர்களின் வீட்டுத் தண்ணீர் கட்டணத்தில் மிச்சமாகும் பணத்தை சேர்த்துக்கொண்டே வரலாம். இரண்டு மாதத்தில் சேரும் பணத்தை உபயோகித்து சென்னையில் ஒரு குளத்தைச் சுத்தப்படுத்தி, தூர்வாரும் பணியை மேற்கொள்ளலாம் என்று முடிவானது.

மாணவர்களிடம் சென்னை தண்ணீர் பிரச்சனையை கூறிய ஷ்ருதி சிங்கப்பூரின் சுற்றுப் புற சூழல் பாதுகாப்பு அமைச்சின் வலைத்தளத்தில் தான் படித்த தண்ணீர் சேமிப்பு பற்றிய குறிப்புகளை சொன்னாள். “ஒரு நாளைக்கு ஷவரில் குளிக்காமல் வாளியில் தண்ணீர் பிடித்து ஒரு குடும்பம் குளித்தால் கிட்டதட்ட அறுபது லிட்டர் தண்ணீர் மிச்சப்படுத்தலாம். அதே போல் பல் தேய்க்கும் பொழுது அல்லது ஷேவ் செய்து கொள்ளும் பொழுது குழாயைத் திறந்து விடாமல் ஒரு டம்ப்ளரில் தண்ணீரைப் பிடித்து வைத்துக் கொண்டு உபயோகப் படுத்தினால் நாற்பது லிட்டர் வீணாகும் இடத்தில் அரை லிட்டர் தண்ணீர் தான் தேவைப்படும். கார் கழுவ மற்றும் வீட்டைச் சுற்றி சுத்தம் செய்ய குழாயிலிருந்து நேராக தண்ணீர் ஹோசைப் பயன்படுத்தாமல் பக்கெட்டில் பிடித்து வைத்துக் கொண்டு செய்தால் பல லிட்டர்கள் மிச்சப் படுத்தலாம். பாத்திரங்களைச் சுத்தம் செய்யும் பொழுது குழாயைத் திறந்து விடாமல் சிங்க்கில் தண்ணீரைப் பிடித்து வைத்துக் கொண்டால் ஒவ்வோரு முறையும் பல லிட்டர்கள் மிச்சப்படுத்தாலாம். வாஷிங் மிஷினில் லோட் பாதியாக இருந்தால் அது முழுவதுமாக நிறையும் வரை காத்திருங்கள். அதைத் தவிர பல சமயங்களில் தண்ணீரை மறுமுறை பயன்படுத்தலாம். காய்கறி சுத்தம் செய்த தண்ணீர் மற்றும் அரிசி அலசிய தண்ணீரைச் செடிகளுக்கு விடலாம். பாத்திரங்கள் கழுவிய தண்ணீரை பாத்ரூம் சுத்தம் செய்யப் பயன்படுத்தலாம்.” இத்தனை லிட்டர்கள் சேமித்தால் எவ்வளவு டாலர்கள் சேமிக்கலாம் என்று சொல்லி தன் பேச்சை நிறைவு செய்தாள்.

மாணவர்களிடையே ஏற்பட்ட சலசலப்பைப் பார்த்த பொழுது இதைப்பற்றி அவர்கள் பெரிதாக யோசித்ததில்லை என்பது நன்றாகப் புரிந்தது. அவர்கள் சில குறிப்புகளை மறந்து விடப் போகிறார்களே என்று மிஸ். ஏமி அவற்றை ஒரு பக்கத்தில் நோட்டீஸ் போல் அச்சடித்து எல்லோரிடமும் தந்தாள். “உங்களுக்கு இரண்டு மாதம் இருக்கிறது இவற்றை நன்றாக பழக்கிக் கொள்ள. அதில் மிச்சமாகும் பணத்தை இந்தக் கலெக்ஷன் பெட்டியில் சேமித்துக் கொண்டே வருவோம்,” என்றாள்.

இந்த ப்ராஜெக்ட்டிற்கு பெற்றோரிடமிருந்து நல்ல வரவேற்பு இருந்தது. ஒரு முக்கியமான விஷயத்தை கற்றுக் கொடுப்பதாகப் பள்ளிக்குப் பாராட்டு கிடைத்தது. பள்ளியின் தலைமை நிர்வாகி ‘இதை ஏன் ஒரு வகுப்பில் மட்டும் செய்ய வேண்டும்? மேல் நிலைப்பள்ளி முழுக்க செய்யலாமே!’ என்று ப்ராஜெக்டை விரிவுபடுத்தினார்.

ஷ்ருதியின் அடுத்த வேலை, ஒரு மாதத்திற்குள் ஒரு குளத்தைத் தேர்வு செய்து, சுத்தம் செய்யும் பணியை ஏற்றுக் கொள்ள சென்னையில் செயல்படும் ஒரு அமைப்புடன் தொடர்ப்பு கொள்வது. ஷ்ரவன் ஒரு நாள், “ஆமா.. நீ ஒரு குளத்தைப் புதுப்பிச்சா தமிழ் நாட்டிலே தண்ணி கஷ்டம் தீர்ந்துடுமாக்கும்” என்று சொன்னவுடன் சட்டென்று அவளின் உற்சாகம் வடிந்தது.

அவள் அப்பா வந்தவுடன் அவளின் முகச் சோர்வுக்கான காரணத்தைக் கேட்டு “அட பைத்தியம். இதுக்கா டவுன் ஆயிட்டே? உன்னை மாதிரி ராஜேந்தர் சிங் சோர்ந்திருந்தார்னா பாலைவனமான ராஜஸ்தான் மாநிலம் இன்னிக்கு பச்சைப் பசேலென்னு மாறி இருக்குமா? குறிப்பா ராஜஸ்தானின் ஆல்வார் பகுதியிலே மூணு வருஷம் தொடர்ந்து பஞ்சம். அங்கிருக்கிற மக்களுக்கு துளிக் கூட தண்ணியில்லை. மாடு, ஆடேல்லாம் செத்துப் போச்சு. மக்களும் பிழைப்புத்தேடி நகரங்களுக்கு போக ஆரம்பிச்சுட்டாங்க. அரசாங்கம் அந்தப் பகுதியிலே நிலத்தடி தண்ணி சுத்தமா இல்லைன்னு அதைக் கறுப்பு பகுதின்னு அறிவிச்சுட்டாங்க. சிங் அந்தப் பகுதியிலே தன் கையாலேயே கிணறு தோண்ட ஆரம்பிச்சார். முதல்லே அவருக்கு அரசு ஆதரவும் இல்லை, மக்களும் அவரை நம்பலே. தளர்ந்து போகாம ஆறு மாதம் தனியே உழைச்சார் சிங். கொஞ்சம் கொஞ்சமா மக்களுக்கு நம்பிக்கை வந்து அவங்களும் உழைச்சாங்க. இன்னிக்குக் கறுப்பு பகுதிங்கிற அவப்பெயர் போய் பச்சைப் பகுதின்னு பெயர் வாங்கி இருக்கு ஆல்வார்,” என்றார் என் கணவர்.

ஆச்சர்யமாக பார்த்த குழந்தைகளிடம் தொடர்ந்தார், “கிட்டதட்ட முப்பது வருஷமா இருக்கிற ராஜேந்தர் சிங்கோட இயக்கத்தின் பெயர் தருண் பாரத் சங். எவ்வளவு கிராமங்களுக்கு கறுப்பு பகுதிங்கிற பேரை மாத்தி இருக்கு தெரியுமா ஷ்ரவன் இந்த இயக்கம்? சொன்னா நம்ப மாட்டே. எழுநூறு கிராமங்களுக்கு மேலே! நாலாயிரம் மழை நீர் அறுவடை அமைப்புகள் கட்டி, ஏகப்பட்ட சின்ன குளங்களையும், ஐஞ்சு பெரிய ஏரிகளையும் புதுப்பிச்சு ராஜஸ்தானின் தலையெழுத்தை மாத்தி எழுதி இருக்கார் ராஜேந்தர் சிங். அது மட்டும் இல்லை ஷ்ருதி, மாக்சேசே அவார்ட் மற்றும் பல விருதுகள் அவரைத் தேடி வந்தன. இன்னிக்கு பல மாநிலங்கள்லே அவரை தண்ணீர் பஞ்சத்தைப் போக்க வழிகள் சொல்லக் கூப்பிடறாங்க தெரியுமா?” என்றார்.

திரு. ராஜேந்தர் சிங்கின் பிரமிக்க வைக்கும் வாழ்க்கைக் குறிப்பைப் படித்த ஷ்ருதி மீண்டும் உற்சாகமாக தன் வேலையைத் தொடர்ந்தாள். சென்னையில் செயல்படும் ஆகாஷ் கங்கா என்ற மழை நீர் அறுவடை பற்றிய விழிப்புணர்வைப் பரப்பும் அமைப்புடன் மின் அஞ்சல் மூலம் தொடர்பு கொண்டாள். அவர்களிடம் தங்கள் பள்ளியின் ப்ராஜெக்டை விவரித்து தங்கள் தேவையைக் கூறினாள். அவர்கள் உடனே சென்னைக்கு அருகே உள்ள கல்லுப்பட்டி கிராம பஞ்சாயத்து தலைவருடன் தொடர்பு கொள்ளச் சொன்னார்கள். அந்தத் தலைவர் கிராம வளர்ச்சிக்காக மிகவும் பாடுபடுவதாகவும், அவர்கள் கிராமத்தில் உள்ள ஒரு குளத்தைச் சீர் செய்தால் அந்த மக்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என்றார்கள்.

அந்த வருடம் தான் ஆசைப் பட்டது போல் ஷ்ருதி கோடை விடுமுறைக்கு சென்னை வந்தாள். விடுமுறைக்காக இல்லை. கல்லுப்பட்டி கிராம மக்களின் சிறப்பு விருந்தினராக. கிராமத் தலைவருடன் தொடர்பு கொண்ட பின் நடந்த விஷயங்கள் ஒரு கனவு போல் இருந்தன. கிராமத் தலைவர் உடனே ஒரு பட்ஜெட் தயார் செய்து சிங்கப்பூருக்கு அனுப்பினார். தங்கள் மக்களே குளத்தை சுத்தம் செய்வது, ஆழப்படுத்துவது, குளக்கரை கட்டுவது போன்றவற்றை செய்வார்கள் என்றும் சாமான் மற்றும் இஞ்சினியருக்கான செலவுகளை ஏற்றுக் கொண்டால் போதும் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார். குழந்தைகள் வழக்கம் போல் அசத்திவிட்டார்கள். உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் அனைவரும் பங்கு பெற்றதால் இரண்டு மாதத்தில் கிட்டதட்ட பத்தாயிரம் சிங்கப்பூர் டாலர்கள் சேர்ந்து விட்டது. இரண்டரை லட்சம் ரூபாய்! கல்லுப்பட்டியில் வேலை துரிதமாக நடந்தது. இதோ இன்று அதை கொண்டாட ஒரு சிறிய விழா. ஷ்ருதியின் வகுப்பு மாணவர்கள் தங்கள் கிளாஸ் போட்டோவை ஷ்ருதியிடம் அனுப்பியிருந்தார்கள். அதை மேடை மேல் வைத்திருந்தார் கிராமத் தலைவர்.

கிராம மக்கள் ஷ்ருதியிடம் வந்து தங்கள் பாராட்டுதலை தெரிவித்தார்கள். ஒரு வயதான பாட்டி தன் சுருக்கம் விழுந்த கைகளால் ஷ்ருதியின் முகத்தை வருடி, “என் ராசாத்தி!” என்று பாராட்டியது ஒரு சிறு கவிதைப் போல் இருந்தது. சில பெண்கள் வந்து, “இவ்வளவு நாள் நாங்க நாலு கிலோமீட்டர் தொலவு நடந்து ஒரு கொடம் தண்ணீ எடுத்தாருவோம். காலைலே இதுக்கே ரெண்டு, மூணு மணி நேரம் ஆயிடும். அதுக்கு அப்புறம் சோறாக்கி, புள்ளகளுக்கு போடறத்துகுள்ள சில நாளு ஒரு மணி கூட ஆயிடும். புள்ளங்க பாதி நாளு தண்ணி இல்லைன்னு இஸ்கூலுக்கு போவாதுங்க. நாங்க வர வரைக்கும் தம்பி தங்கச்சிங்கள வேற பாத்துக்கணும். எங்களாலே வேறேந்த வேலைக்கும் போவ முடியல. தண்ணிக்கு அலையறதே பொழப்பாபூடுச்சி. மவராசி, உன்னாலே தண்ணி வந்துச்சின்னா நாங்க நிம்மதியா வீட்டு விசயங்களை கவனிப்போம்,” என்றார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய கிராமத் தலைவர் கூறினார், “பெரிய அரசியல் தலைவர்களும், நிபுணர்களும் தண்ணீர் பஞ்சத்தைத் தீர்க்க தேசியநதிகளை இணைக்கும் திட்டம், கடல் நீரிலிருந்து உப்பை நீக்கும் திட்டம்னு பல திட்டங்கள் தீட்டிக்கிட்டு இருக்காங்க. அது நல்ல விஷயம் தான். ஆனா இந்தியாவிலே வாழாத ஒரு பன்னிரண்டு வயது குழந்தை நம்ம தண்ணி கஷ்டம் தீரணும்னு நினைச்சி ஆறே மாசத்துலே ஒரு குளத்துக்கு உயிர் கொடுத்திருக்கான்னா அது சாதாரண விஷயமே இல்லை. ஒரு முறை மழை பெய்தால் போதும். இந்தக் குளத்தின் நீர் கோடையிலே கூட வத்தாம நம்ம தண்ணிக் கஷ்டத்தை தீர்த்துடும். நம்ம ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் நம்பிக்கை வச்சிருக்கிற எழுச்சி தீபங்கள்லே ஷ்ருதியும் ஒருத்தி,” என்று தன் உரையை முடித்தார்.

கிராம மக்கள் அனைவரின் ஆசிகள் மற்றும் அன்புடன் சென்னை வந்தோம். அங்கே தன் மகனின் திருமணத்திற்கு அழைக்க வந்திருந்தார்கள் என் அத்தையும் அத்திம்பேரும். அவர்கள் ஷ்ருதியைப் பார்க்க காத்திருந்தார்கள்.

“அடி சந்தியா.. உன் பொண்ணு எங்களுக்கெல்லாம் நல்ல வழியைக் காமிச்சிருக்காடி. வெங்கட் கல்யாணத்துக்கு டம்பரச் செலவு பண்ணாம, கல்யாணத்தை சிம்பிளா பண்ணி நாங்களும் பொண்ணாத்துகாராளும் சேர்ந்து அந்தப் பணத்தை எங்க வில்லிவாக்கத்திலே இருக்கிற காசி விஸ்வநாதர் கோயில் குளத்தை சரி பண்ண செலவழிக்கப் போறோம். அது மட்டும் இல்லை கல்யாணத்து வரவா எல்லாரையும் கிஃப்ட் வேண்டாம், இந்தக் காரியத்துக்கு உங்களாலான பணத்தை டொனேஷனா கொடுங்கோன்னு கேட்கப் போறோம். பொண்ணாத்துகாராளுக்கும் இதுலே ரொம்ப சந்தோஷம் சந்தியா. தவிச்ச வாய்க்கு தண்ணி கொடுக்கிறது எவ்வளவு பெரிய புண்ணியம். இந்தப் புண்ணிய காரியத்தோட இவா புது தாம்பத்தியத்தை ரம்பிக்கபோறா,” என்று நெகிழ்ச்சியோடு சொன்னாள் அத்தை.

“ஆமா சந்தியா. நன்னா இருந்த குளம் இன்னிக்கு ஒரு சின்ன குட்டை மாதிரி ஆயிடுத்து. கன்ஸ்ட்ரக்ஷன் வேஸ்ட், குப்பை சத்தை எல்லாத்தாலேயும் தண்ணி வர வழியெல்லாம் அடைஞ்சு போய்டுத்து. நல்ல தண்ணி இல்லாதது மட்டுமில்லை இன்னிக்கு அந்த அழுக்கு தண்ணி தேக்கத்துனாலே கொசு தொந்தரவும், நாத்தமும் தான் மிச்சம்! எல்லாரும் சும்மா புலம்பிண்டே இருந்தா மட்டும் போறுமா? ஏதாவது செஞ்சு காட்டணும்ங்கறதை உன் பொண்ணு நன்னா புரிய வைச்சுட்டா. அதான் இந்த ஐடியா,” என்றார் அத்திம்பேர். கேட்கக் கேட்க ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

“சந்தியா, அத்தையோட இன்னோரு புரட்சி என்ன தெரியுமா? கல்யாணத்துலே தேங்கா வெத்தலை பாக்கெல்லாம் கிடையாதாம். எல்லாருக்கும் ஒரு மரக் கன்னு தரப் போறா அத்தை” என்றாள் அம்மா.

“அத்தை... நீ எங்கேயோ போயிட்டே அத்தை” என்று நான் சிரித்தபடி அத்தையைக் கட்டிக் கொண்டேன்.

அடுத்த முறை சென்னைக்கு வரும் பொழுது நிச்சயம் ஒரு நல்ல மாறுதல் இருக்கும் என்ற நம்பிக்கையுடனும், நிறைவான மனத்துடனும் சென்னையை விட்டு கிளம்பினோம்.


இந்த கதையைப் பற்றிய சில குறிப்புகள்

இந்த கதையில் விவரித்த பல விஷயங்கள் உண்மை:

1. ஷ்ருதியின் பள்ளி என்று விவரிக்கப்படும் பள்ளி United World College of South East Asia. அவர்கள் உண்மையிலேயே தங்கள் மாணவர்களைப் பல சமூக தொண்டில் ஈடுபடுத்துகிறார்கள். இந்தியாவிலும் சில சமூக நல நிறுவனங்களுடன் சேர்ந்து அந்தப் பள்ளி மாணவர்கள் தொண்டாற்றியிருக்கிறார்கள். இன்னமும் தொடர்ந்து செய்கிறார்கள்.
பள்ளியின் வலைத் தளம்

2. ஷ்ருதியின் குறிப்புகள் காணப்படும் வலைத்தளம் சிங்கப்பூர் சுற்றுப்புற பாதுகாப்பு அமைச்சின் தளம்

3. திரு. ராஜேந்தர் சிங்கின் அமைப்பு பற்றிய தளம்

4. சென்னையில் செயல்படும் ஆகாஷ் கங்கா மழை நீர் சேமிப்பு மையத்தின் தளம்

5. கோயம்புத்தூரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனியார் நிறுவனங்களும், பொது மக்களும் சேர்ந்து பல தண்ணீர் தேக்கங்களையும், குளங்களையும் சீர் செய்து, ஆழமாக்கி தண்ணீர் பஞ்சத்தை போக்க தங்களால் ஆன எல்லா முயற்சிகளையும் செய்து வருகிறார்கள். அதன் பலனாக இன்று கிருஷ்ணம்பட்டி டாங்கில் தண்ணீர் நிரம்பி இருக்கிறது. அந்த இயக்கத்தின் பெயர் ப்ராஜெக்ட் சிறு துளி. அவர்களின் சாதனை தமிழகமெங்கும் பரவ வேண்டும். ஒரு சின்ன வழியிலாவது என் பாராட்டை பதிவு செய்ய வேண்டும் என்ற ஆசையில் இந்த கதைக்கு சிறு துளி என்று பெயர் வைத்திருக்கிறேன். இந்த இயக்கத்தைப் பற்றிய செய்தி 22ம் மார்ச் 2004 ஹிண்டுவின் மெட்ரோ ப்ளஸ் பகுதியில் வந்துள்ளது. வலைத்தளம்

6. கோயில் குளங்களை பற்றிய ஒரு ஆய்வு பேப்பர்

Monday, October 24, 2005

If women ruled the world.....

என்று தோழி ஒருத்தி அனுப்பியிருந்த படங்கள்....